tamilnadu

img

திருவாரூர், கடலூரில் நாளை முழு ஊரடங்கு... 

திருவாரூர்
தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் அதிக பாதிப்புள்ள சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகராட்சி பகுதிகளில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்போவதாகவும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 3 நாட்களுக்கும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேற்கூறப்பட்ட 5 மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு தொடங்கவிருக்கும் நிலையில், காலை 6 மணி இரவு 9 மணி வரை கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

இந்நிலையில் திருவாரூர் மற்றும் கடலூரில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
 

;