tamilnadu

img

என்பிஆர் கணக்கெடுப்பிற்கு எந்த ஆவணங்களையும் கொடுப்பதில்லை பல்வேறு அமைப்புகள் முடிவு

மன்னார்குடி, மார்ச் 15- திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் என்பிஆர் கணக்கெடுப்பிற்கு எந்த ஆவணங்களையும் கொடுப் பதில்லை. வங்கிகளில் உள்ள வைப்பு நிதி முழுமையும் திரும்பப் பெறுவது மற்றும் குறைந்த இருப்புத் தொகை நீங்கலாக எஞ்சிய சேமிப்பு நடப்பு கணக்கு தொகை யனைத்தும் எடுத்து விடுவது, மார்ச் 20ந் தேதி முதல் ஏப்ரல் 20ந் தேதி வரை முத்துப்பேட்டையில் கட்டுமானப் பொருட்கள் பாவ னைப்பொருட்கள் உள்பட வாங் கும் போது விதிக்கப்படும் வரி கிடைக்கா இயக்கத்தை மேற் கொள்வது, ரமலான் நோன்பு காலங்களில் தமிழக அரசு வழங்கும் அரிசியை இந்தாண்டு பெறுவதில்லை போன்ற முக்கிய தீர்மானங்களை அனைத்து பள்ளி வாசல்களை உள்ளடக்கிய அனைத்து ஜமாஅத் நிர்வாகி கள் கூட்டம் ஞாயிறன்று முத்துப் பேட்டையில் நிறைவேற்றியது.  முத்துப்பேட்டை புதுபள்ளி வாசலில் நடைபெற்ற கூட்டத் தில் அனைத்து ஜமாத் கூட்ட மைப்பின் தலைவர் ஜெர்மன் அலி தலைமை வகித்தார். எஸ்டிபிஐ மாநில செயலாளர் அபூபக்கர் சித் திக், தமுமுக தலைவர் சம்சுதீன், ஜாமியா பள்ளி வாசல் நிர்வாகி முகமது மீரா லெப்பை மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்த னர். குடியுரிமையில் மதத்தை புகுத்தும் மத்திய அரசை கண்டித் தும் தங்கள் கோரிக்கைகளை ஏற்காத தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் புறக்கணிக்கும் ரீதியில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அனைத்து ஜமாத் அமைப்பின் நிர்வாகிகள் கூறினர். இக்கூட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைத்தலை வர் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வக்கீல் தீன் முகமது, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கருத்தப்பா சித்திக், துணை ஒருங்கிணைப்பா ளர் ஆரூரான் சாதிக், தமுமுக நகர துணைச்செயலாளர் சீமான், வழக்கறிஞர் தாஜீம் மற்றும் போராட்டக்குழுவை சேர்ந்த சிராஜ் அம்சா, மன்சூர், கொய்யா சாதிக், நெய்னா முகமது உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த வர்கள் அனைத்து ஜமாஅத் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். (நமது செய்தியாளர்)