குடவாசல், ஆக. 4- திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி கிராமங்களில் கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் ஆய்வுக்காக குறைந்தபட்ச ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆய்வக பரி சோதனை ஊழியர்களுக்கு தீக்கதிர் செய்தி எதிரொலியாக சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த ஜூலை 17 அன்று தீக்கதிர் நாளி தழில், ‘தமிழக அரசின் நேரடி உத்தரவு அடிப்ப டையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிய மிக்கப்பட்ட கொரோனா ஆய்வக பரிசோ தனை ஊழியர்களுக்கு, மூன்று மாதமாக சம்ப ளம் வழங்கவில்லை, ஊழியர்கள் பரிதவிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டி ருந்தது. தீக்கதிரில் செய்தி வெளிவந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவ ட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ‘வெளி மா வட்டத்தில் இருந்து அரசு நேரடி உத்தரவின் அடிப்படையில் வேலைக்கு வந்த ஆய்வக பரி சோதனை ஊழியர்களுக்கு அரசு அறி வித்த குறைந்தபட்ச ஊதியம் கூட கடந்த 3 மாதமாகியும் கிடைக்கவில்லை. உடனடியாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் முன் முயற்சியால், திருவாரூர் மாவட்டத்தில் கொ ரோனா பரிசோதனைக்காக, நியமிக்கப்பட்ட ஆய்வக ஊழியர்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலே சம்பளம் வழ ங்கப்பட்டுள்ளது. இதனையறிந்த ஆய்வக ஊழியர்கள், செய்தி வெளியிட்ட தீக்கதி ருக்கும், அதற்காக முயற்சி எடுத்த மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட ஆட்சி யர் த.ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்க ளுக்கு நன்றி தெரிவித்தனர்.