திருவாரூர், அக்5- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் 28 குறு வட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள அலுலவர்கள் தினசரி காலை 7 மணிக்கு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்திட அனைத்து நடவ டிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. பொது மக்கள் தேவையற்ற கலன்களை அப்புறப்படுத்தியும் உபயோகம் இல்லாத கலன்களை நீர் தேங்காமல் கவிழ்த்தும், நீர் சேமிப்புத் தொட்டிகளை கொசு புகாவண்ணம் நன்றாக மூடியும் மற்றும் வாரத்திற்கு ஒரு முறை நீர் சேமிக்கும் தொட்டிகளை பிளிச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி வைத்திட வேண்டும். மேலும் காய்சசலுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே தாமதமில்லாமல் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று இரத்தப் பரிசோத னையும், சிகிச்சையும் பெற்றுக் கொள்ள பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காய்ச்ச லால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் உயிர் காக்கும் மருந்தான ஓஆர்எஸ் போன்ற திரவங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் திரு வாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய வற்றை பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டுமென ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்தார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், இணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநர்(சுகாதாரம்) ஸ்டான்லி மைக்கேல் மற்றும் அரசு அலுவ லர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.