கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் ஒன்றியம் மாவூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.சாமியப்பன், பா.கோமதி, ஒன்றியத் தலைவர்கள் பி.மாதவன், கே.ஜெயபால் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.