tamilnadu

img

விவசாயிகள் கடனை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூலை 23- விவசாயிகளுக்கு அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், புதிய கடன்களை வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி திருத்து றைப்பூண்டி வடக்கு ஒன்றியம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கச்சனம் கடை தெருவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன் தலைமை வகித்தார்.  கோரிக்கைகளை விளக்கி கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ். முத்துக்குமாரசாமி, எஸ்.எஸ்.பால குரு, எம்.முருகதாஸ், எஸ்.சேகர், பி. இராமச்சந்திரன், பி.மாதவவேலன், ஆர்.நிர்மலா மற்றும் விவசாய சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், விவ சாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு வினர் உட்பட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;