tamilnadu

பேரிடர் பாதிப்பிலிருக்கும் விவசாயிகளுக்கு மானியத்துடன் விதைகள் வழங்குக சிபிஎம் வலியுறுத்தல்

மன்னார்குடி, மே 21- ஜூன் 12-ல் மேட்டூர் நீர் அணை திறக்கப் படும் சூழ்நிலையில் போர்கால அடிப்படை யில் நீர்நிலைகள் பாசன வாய்க்கால், வடி கால்களை தூர்வாரி விவசாயத்திற்கு தயார் செய்ய வேண்டும். 100 சத மானியத்துடன் விதை மற்றும் இடுபொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி வட்டாட்சியர் என்.கார்த்தியிடம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நக ரக்குழு சார்பில் நகர செயலாளர் எஸ்.ஆறு முகம் தலைமையில் நடைபெற்ற இயக்கத் தில் மாவட்டக்குழு உறுப்பினர் தெ.சந்திரா, மூத்த கட்சி உறுப்பினர் பி.சந்திரகாசன், நகரக்குழு உறுப்பினர்கள் கே.அகோரம், எம்.சிராஜுதீன், பி.கலைச்செல்வி, ப.தெட்சி ணாமூர்த்தி, ஆர்.மகாதேவன், கிளை செயலா ளர்கள் கே.காளிமுத்து, பி.மாரிமுத்து, வீ. கோவிந்தராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மன்னார்குடி ஒன்றியக்குழு சார்பில்  ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம் தலை மையில் கோரிக்கை மனு கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் எம்.கலை மணி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தம்பு சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் மன்னன். மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.