முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை, எடையூர், சங்கேந்தி உள்ளிட்ட கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் புதுப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்றது. ஜாம்பவானோடை தர்காவிற்கு முன்பாக ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் எடையூர், சங்கேந்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அழகானந்தம் திவ்யபாரதி ஜாம்பவானோடை ஊராட்சி தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினருமான பி.வி.கனகசுந்தரம், ஊராட்சி செயலாளர், பொது சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.
*********************
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுக்கோட்டை பெருங்காடு நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பில் தலைவர் தங்கதுரை முகக்கவசம் வழங்கினார். செயலர் பன்னீர்செல்வம், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், ஊராட்சி தலைவர் மல்லிகா, ஊர் அம்பலம் ராஜீவ் காந்தி கலந்து கொண்டனர்.
*********************
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொன்னமராவதியில், பேரூராட்சி சார்பில் சோப்புடன் கைகழுவுவதற்கான வாஷ்பேஷின்களை, காவல் ஆய்வாளர் கருணாகரன், காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி திறந்து வைத்தனர். தொட்டியம்பட்டி ஊராட்சி தலைவர் கீதா சோலையப்பன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.