tamilnadu

திருவாரூர் நகராட்சி பகுதியில்  கொரோனா பரவல் அதிகம்

திருவாரூர், ஜூலை 27- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று திருவாரூர் நகராட்சி  பகுதியில் வேகமாக பரவி வருகிறது. 30 வார்டுகளைக் கொ ண்ட இந்த நகராட்சியில் நேதாஜி சாலை, கீழவீதி தேரடி, கீழ வீதி, அங்காளபரமேஸ்வரி கோவில் வீதி, காட்டுக்காரத்தெரு,  காரைக்காட்டு தெரு, அரசு ஊழியர் குடியிருப்பு, கொடிக்கால்  பாளையம், சேந்தமங்கலம், விளமல் ஆகிய புறநகர் பகுதிகளி லும் நோய்த்தொற்று பரவியுள்ளது. இதன் வேகத்திற்கேற்ப சுகா தாரப்பணிகள் நடைபெறவில்லை.  சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்க ளின் பற்றாக்குறை காரணமாக நகராட்சி நிர்வாகம் தடுமாறி  வருகிறது. நகராட்சி பகுதி முழுவதும் சாக்கடை பாதைகள்  சரி செய்யப்படாமல் கழிவு நீர் தேங்கி நிற்பதோடு அவற்றில்  குப்பைகளும் அடைத்துக் கொண்டுள்ளது. அவ்வப்போது  மழை பெய்து வருவதால் கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது.  இதனால் பல்வேறு காய்ச்சல் அபாயமும் உருவாகியுள்ளது.  ஒருபுறம் கொரோனா, மறுபுறம் டெங்கு என இருமுனை தாக்கு தலை சந்திக்கும் நிலைக்கு திருவாரூர் நகர மக்கள்  தள்ளப்பட்டுள்ளனர்.எனவே போர்க்கால அடிப்படையில்  மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும், உள்ளாட்சி  அமைப்பும் பணிகளை முடுக்கி விட வேண்டும்.