திருத்துறைப்பூண்டி, மார்ச் 18- திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் அம்மனூரில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பி னர் என பல்வேறு பொறுப்புகளில் வகித்த ஜி.எம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிற கோ. மாரியப்பன் அவர்களுடைய 19 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினரும் அம்ம னூர் ஊராட்சி மன்றத் தலைவரு மான எஸ்.முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தர மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.என்.முருகானந்தம், ஒன்றியச் செயலாளர் வி.டி. கதிரே சன் ஆகியோர் ஜி.எம் நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் ஏ.முருகானந்தம், எம்.முருக தாஸ், பி.மாதவவேலன், எஸ்.சேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக வாசகர் வட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் அறிக்கை சம்பந்தமாக வும், கட்சி உறுப்பினர்கள் செயல் பாடு குறித்தும் தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.