மன்னார்குடி, ஜூலை 8- தொழிலாளியின் நலனுக்கு எதிராக சரணா கதி அடையும் எந்த திட்டத்திற்கும் நாம் பங்கு தாரராக இருக்க முடியாதுஎல்லா அநீதிக ளுக்கு எதிராக சமரசமின்றி நாம் போராட வேண்டும் என்ற வைர வரிகளுக்கு சொந்த மானவரும் தொலைதொடர்பு ஊழியர்களின் முன்னோடியும் மேற்கு வங்கத்தின் மாபெரும் தொழிற்சங்க தலைவர்களில் ஒருவருமான தோழர் கே.ஜி.போஸின் 100-வது நினைவு தினம் மன்னார்குடி தொலை தொடர்பு அலு வலகத்தில் பிஎஸ்என்எல்யு மற்றும் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கூட்டமைப்பினால் இணைந்து கடைபிடிக்கப்பட்டது. பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கே.பிச்சைகண்ணு நினை வேந்தல் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கே.ஜி.போஸின் உருவப்படத்தை கே.ஆர். பாஸ்கர் திறந்து வைத்தார்.