திருவாரூர், நவ.9- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பி லான கால்நடைகளுக்கான அவசர மருத்துவ ஊர்தியான ஆம்புலன்ஸ் வாகன சேவையை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இச்சேவையை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். இச்சேவையா னது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். பாம்பு விஷ முறிவு மருந்து மற்றும் நுண்ணுயிரிகளை கண்டறியும் நுண்ணோக்கி வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இவ்வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர் சென்று கால்நடைகளுக்கான அவசர மருத்துவ சேவைகளை செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.