tamilnadu

தூய்மை பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் மனு

திருவாரூர், ஜூலை 2- திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணி யாளர்கள் மற்றும் குடிநீர் மேல்நிலை நீர்த்தே க்கத்தொட்டி இயக்குபவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி த்துறை சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.பால சுப்ரமணியன், செயலாளர் கே.முனியாண்டி மற்றும் நிர்வாகிகள் மனுக்களை வழங்கி னர். 2020-21 ஆம் ஆண்டிற்கு தூய்மைப் பணி யாளர்களுக்கு தற்போது உள்ள சூழ்நி லையை கருத்தில் கொண்டு நாள் ஒன்றுக்கு  குறைந்தபட்சம் 600 ரூபாய் தினக் கூலியாக வழங்க வேண்டும். ஏற்கனவே 291 ரூபாய் 2019 -20 ஆம் ஆண்டிற்கு கூலி நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்து வழங்கிட வேண்டும். நகராட்சி, பேரூ ராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் பணி யாற்றி வரும் தூய்மை காவலர்களுக்கு தர மான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் பெற்றுக் கொண்டனர்.

;