tamilnadu

img

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடி: அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு முரளி தலைமை வகித்தார்.
வட்டச் செயலாளர் செந்தில் ராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பிரகாஷ், வட்டத் தலைவர் ஏவி.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சங்கத்தின் மாவட்ட செயலாளர் வே.சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். நிறைவாக முத்துக்குமார் நன்றி கூறினார்.