tamilnadu

img

மில் தெருவில் சாலை பணி முடியுமா? சிபிஎம் - திமுக நாற்று நடும் போராட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 29- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மில்தெரு சாலை யை உடனடியாக அமைக்கக் கோரி சிபிஎம் மற்றும் திமுக சார்பில் நாற்று நடும் போரா ட்டம் திங்களன்று கள்ளிக்கு டியில் நடைபெற்றது.  திமுக ஒன்றியச் செயலா ளர் ஆர்.மனோகரன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் தலை மை வகித்தார். திமுக ஒன்றிய  செயலாளர் மனோகரன் கூறு கையில், இந்த சாலை சுமார்  1.054 கி.மீ. தூரம் கொண்டது. ரூ. 96.45 லட்சம் மதிப்பீட்டில் இந்த சாலை வேலை நடை பெற்று வருகிறது. தற்போது  மழைக்காலம் வந்துவிட்ட தால், சாலைப் பணியை விரைந்து முடிக்கக் கோரி யும், தாமதமாக பணியை  மேற்கொள்ளும் ஒப்பந்தக்கா ரர், அதிகாரிகளை கண்டி த்தும் இந்த நாற்று நடும் போ ராட்டம் நடைபெறுகிறது. உட னடியாக இந்த சாலையை முடிக்காவிட்டால் அனைத்து  கட்சிகளுடன் மிகப்பெரிய போ ராட்டத்தை நடத்துவோம் என்றார்.

;