tamilnadu

img

காவல்துறையின் அடக்குமுறையால் தொழிற்சங்கத் தலைவருக்கு உடல் நலம் பாதிப்பு

திருவாரூர், பிப்.19- சிஐடியு தையற் தொழிலாளர் சங்க த்தினர் திங்கட்கிழமை திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தையற் கலை ஞர்களுக்கு வங்கி மூலம் கடனும், வீடு இல்லாதவர்களுக்கு வீடும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சி.சுந்த ரம், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், செயலாளர் இரா. மாலதி ஆகியோர் விளக்கவுரை யாற்றினர். சிஐடியு மாவட்ட பொருளா ளர் எம்.பி.கே.பாண்டியன், துணைத் தலைவர் ஜி.பழனிவேல், துணைச் செயலாளர் எம்.கே.என்.அனிபா உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  இதில் கடுமையான வெயிலாக இருந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த நிழலான பகுதி யில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ள கேட்ட போது காவல்துறையினர் மறுத்து விட்டனர். இதனால் கடுமையான வெயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. சுந்தரம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சங்கத்தி னர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக் கப்பட்ட போது இயல்பு நிலைக்கு திரும்பிய பின் அவர் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
சிஐடியு கண்டனம்
மயங்கி விழுந்ததற்கு காரணம் கடுமையான வெயில் மட்டுமே கார ணம் தவிர அவருக்கு இரத்த அழுத்தம் என வேறு ஏதும் இல்லை என்பது சிகிச்சையில் தெரிந்தது. தற்காலி கமாக சாமியானா பந்தல் அமைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதிக்கவில்லை. இது போன்ற அறவழி போராட்டங்களில் தொழிலாளர்கள், பெரும்பாலும் பெண்கள் பங்கேற்கும் நிலையில் ஜனநாயகத்தின் நெறிமுறைகளை மதிக்காமலும், காவல்துறை தொ டர்ந்து இத்தகைய அடாவடி செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அறவழிப் போராட்டங்களை உரிய வகையில் நடத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட சிஐடியு கேட்டுக் கொண்டுள்ளது.