திருவாரூர், ஜூலை 21- தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இரா.மாலதி தலைமை வகித்தார். அனைத்து தையற்தொழிலாளர்களுக்கும் கொரோனா பேரிடர் கால நிவாரண நிதி வழங்க வேண்டும். 9 மாத கால மாக நிலுவையில் உள்ள பென்சன் தொகையை விடுவிக்க வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பி த்தலை உடனடியாக வழங்க வேண்டும். ஆன்லைன் பதிவின் போது சாதிச்சான்றிதழ் கேட்பதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிறைவாக தொழிலாளர் நல அலுவலரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.