tamilnadu

img

திருத்துறைப்பூண்டி அரசுக் கல்லூரியில் அடிப்படை வசதி கோரி போராட்டம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 2- தமிழகத்தில் தற்போது கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதை கண் டித்தும், அவர்களை நிரந்தரமாக அதே கல்லூரிகளில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தியும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரியும், உறுப்புக் கல்லூரியை அரசு கல்லூரி யாக மாற்ற வலியுறுத்தியும் திங்க ளன்று திருத்துறைப்பூண்டி பாரதி தாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் விக்னேஷ் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் விக்ரம், கல்லூரி நிர்வாகி ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.