tamilnadu

img

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-ஐ எதிர்த்து 26-வது நாளாக தொடர் போராட்டம்

மன்னார்குடி, மார்ச் 12- அனைத்து ஜமாஅத் அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்  சட்டத்திற்கு எதிராக முத்துபேட்டையில் நடத்தும் தொடர் இருப்பு போராட்டம் புதனன்று 26-வது நாளை எட்டியுள்ளது.   தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூ டாது என வலியுறுத்தி கடந்த பிப்.15  அன்று மாலை முதல் தொடர் காத்திருப்பு  போராட்டத்தை துவங்கினர். இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள்-பெண்கள், குழந்தைகளுடன் அமர்ந்து இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட்டு வருகின்றனர். 26-வது நாள் போராட்டத்திற்கு போராட்ட கூட்டமைப்பு தலைவர் ஜெர்மன்அலி தலைமை வகித்தார்.  ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தப்பா சித்திக், அன்சாரி, வக்கீல் தீன்முகமது, அபுபக்கர் சித்திக், சம்சுதீன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனை த்து ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  இதில் இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் தனித்தனியாக பங்கேற்ற எதிர்ப்பு முழக்கங்கள், பெண்களின் சிறப்பு உரைவீச்சுக்கள் நடைபெற்றன