tamilnadu

img

ஆற்றோரம் கிடந்த 3 ஆயிரம் ஆதார் அட்டைகள்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே ஆற்றோரம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள்  வீசியெறியப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தேவர்பண்ணையில் உள்ள முல்லியாற்றின் ஓரத்தில் வியாழனன்று காலை இரு மூட்டைகள்  கிடந்துள்ளன. இதனைப் பார்த்த சிலர் மூட்டைகளை கீழே கொட்டி பார்த்த போது அதில் ஏராளமான ஆதார் அட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறை யினருக்கு தகவல்கொடுத்தனர்.அங்கு வந்த காவல்துறையினர் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

;