tamilnadu

img

வேலை கேட்டு வாலிபர்கள் பேரணி - பொதுக்கூட்டம்

திருவள்ளூர், பிப்.24- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ‘எங்கே என் வேலை’ என்ற முழக்கத்துடன் திருவள்ளூ ரில் பேரணி - பொதுக்கூட்டம் ஞாயிறன்று (பிப்.23)   நடை பெற்றது. தமிழகத்தில்  சுமார் 90 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவல கங்களில்  பதிவு செய்து வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில அரசாங்கம் அதைப் பற்றித் துளியும் சிந்திக் காமல் உள்ளது. மேலும்  டிஎன்பிஎஸ்சியிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலை என்பதே பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத் தில் புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்கக் கூடிய தொழிற்சாலைகளை திறக்க வேண்டும், மூடிய ஆலை களை திறக்க வேண்டும், சுய தொழில் தொடங்க மானி யத்துடன் கூடிய வங்கிக்க டன் வழங்க வேண்டும், கிராமப்புற இளைஞர்க ளுக்கு வேலைக்கான பயிற்சி, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் உள்ள மைய நூலகத்தில் பேரணி துவங்கி பஜார் வீதியில் நிறை வடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு  மாவட்டத் தலைவர் டி.மதன் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் எஸ்.பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலாளர் எஸ்.தேவா, பொருளாளர் கலை யரசன், மாவட்ட துணைத் தலைவர் ப.லோகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் விஜயகாந்த் ஆகியோர் பேசினர். பெரியபட்டினம் மதன் நன்றி கூறினார்.