tamilnadu

வாகன விபத்தில் தொழிலாளி பலி

ஊத்துக்கோட்டை, பிப்.24- ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் ராம மூர்த்தி (48) விவசாயக் கூலி தொழிலாளி. இவர் பாலவாக்கம் பகுதியில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் வாங் கிக் கொண்டு பெரம்பூருக்கு சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்துக் கோட்டையிலிருந்து பெரிய பாளையம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது. இதில் ராம மூர்த்தி மற்றும் வாகனம் வந்த ஊத்துக்கோட்டையை சேர்ந்த அய்யப்பன் (35), பின்னால் அமர்ந்து வந்த முரளி (60) ஆகியோர் படு காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்துவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். பின்னர் மேல் சிகிச்கைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமமூர்த்தி பலியானார்.

;