திருவள்ளூர், செப்.26- திருவள்ளூர், பெரிய குப்பம் லால்பகுதூர் தெருவில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை குடியிருப்பு பகுதியில் இருப்பதால் கடைய அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து இரு முறை கடை மூடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் மதுக்கடை திறந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வியாழனன்று கடைய மூட வலியுறுத்தி முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரை கைது செய்தனர். இந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.மோகனா தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கே.ரமா, பொருளாளர் ஏ.பத்மா, திருவள்ளூர் பகுதித் தலைவர் விஜியா, துணை நிர்வாகிகள் பூங்கோதை, வள்ளி, சிபிஎம் மாவட்ட செயற்கழு உறுப்பி னர்ஆர்.ஏ.மோகனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.