தலைமை ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வை உடனே நடத்த வலியுறுத்தல்
திருவள்ளூர், ஆக. 16- சென்னை மாநகராட்சியைப் போல பிற மாவட்டங்களிலும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சா.ஞான சேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணி யிங்கள் காலியாக உள்ளன. அத்தகைய இடங்களில் தலைமை ஆசிரியர் பணியை, முதுகலை ஆசிரியர்கள் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இந்நிலையில், 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை முதுகலை ஆசிரியர்களே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளியை நிர்வாகம் செய்வதில் சிக்கல் ஏற்படும். இதனால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கிராமப்புற, ஏழை எளிய, மாணவர்களின் தொடர் கல்வியில் தடை ஏற்படுகிறது. மேலும், மாண வர்கள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும். எனவே, சென்னை மாநக ராட்சியை போன்று, பிற மாவட்டங்களிலும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை உடனே நடத்த தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏரிக்கரையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்
திருவள்ளூர், ஆக. 16- புழல் ஏரிக்கரையோரம் மருத்துவ கழிவுகள், காலாவதி மாத்திரை கள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலி யுறுத்தி உள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் புழல் ஏரியின் கரையோரத்தில் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் அவ்வப்போது கொட்டப்படு கிறது. இந்நிலையில் வெள்ளியன்று (ஆக.14) சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றத்தில் புழல் ஏரிக்கரையோரம் குவி யல் குவியலாக காலாவதியான மாத்திரைகள், மருந்துகள், மருத்துவ கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மருத்துவ கழிவுகள் ஏரிக்கரையோரம் கொட்டுவதால், அவை தண்ணீ ருடன் கலந்துவிடும். அந்த தண்ணிரை பயன்படுத்தும் சென்னை மக்கள் பாதிக்கப்படுவார்கள். காலாவதியான மாத்திரைகளால் விபரீத விளைவுகள் உருவாகும். எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை அகற்றி ஏரியை பாதுகாக்க வேண்டும். கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மருத்துவ கழிவுகளை கொட்டி யவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சிட்கோ நகரில் பாதாள சாக்கடை திட்டம்: வாலிபர் சங்கம் கோரிக்கை
சென்னை, ஆக. 16- சிட்கோ நகரில பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் வில்லிவாக்கம் பகுதி மாநாடு சனிக்கிழமையன்று (ஆக.15) நடைபெற்றது. 50 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் 24 மணி நேர மருத்துவ மனையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் மணிகண்டன், செய லாளர் மஞ்சுளா, பொருளாளர் சித்தார்த்தன், மாநில குழு உறுப்பினர் சரவண தமிழன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 13 பேர் கொண்ட பகுதிக்குழுவின் தலைவராக நிகில் தேவ், செயலாள ராக யூஜின் பர்க், பொருளாளராக டேவிட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
புகையிலைப் பொருட்கள் பதுக்கிய வழக்கில் 3 பேர் கைது
கடலூர், ஆக.16- கடலூரில் புகையிலைப் பொருட்கள் பதுக்கிய வழக்கில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் அருகிலுள்ள கே.என்.பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்தத் தகவலின்பேரில் வெள்ளியன்று சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, அங்கிருந்த சுமார் 10 டன் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். போதைப் பொருட்களை பதுக்கியவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் விசாரணை நடத்தி திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்த பாரதி (36), சரவணன் (49), சாவடியைச் சேர்ந்த ராம்குமார் (19) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கே.என்.பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த், திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்த தேவநாதன், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த கணபதி ஆகியோரை தேடி வருகின்றனர்.