புதிய கல்விக் கொள்கையை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் வியாழனன்று (ஜூலை 25) தொடங்கியது. இதனையொட்டி தென்சென்னை மாவட்டம் மயிலாப்பூர் பகுதியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், எம்.தாமு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெயசங்கரன், எம்.சரஸ்வதி, பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
********************
திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் வியாழனன்று (ஜூலை 25) துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பினர் ஜி.விநாயக மூர்த்தி, பகுதிக்குழு உறுப்பினர்கள் பி.கதிர்வேல், இ.ஜெயவேல், சலீல்குமார், சதீஷ், ஒன்றியச் செயலாளர் என். ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
********************
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் துவக்கிவைத்தார். கிளைச் செயலாளர் எஸ்.துளசி தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் கே.வாசுதேவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. மாசிலாமணி, எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
********************
அண்ணாநகர் பகுதி, எம்எம்டிஏ காலனியில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
********************
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்டச் செயலாளர் இ.சங்கர் துவக்கிவைத்தார். நகரச் செயலாளர் வேதகிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன், மாவட்டக்குழு உறுப்பினர் அரிகிருஷ்னன், பகுதிச் செயலாளர் வேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
********************