tamilnadu

கொரோனாவுடன் டெங்கும் பரவல்: மக்கள் அச்சம்

திருவள்ளூர், ஜூன் 29- எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வேலி கிராமத்தில் கொரோனா நோய் தொற்றுடன், டெங்கு காய்ச்சலும் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வேலி கிராமத்தில் உள்ள மக்களுக்கு கடந்த வாரம் தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் அந்த கிராமத்திற்கு சென்று  மக்கள் அனைவரையும் பரிசோதனை  செய்தனர். இதில், 5பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும் 4 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

;