தேசிய கல்விக் கொள்கையை திரும்பபெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சூரியபிரகாஷ், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், நகரச் செயலாளர் வி.ஆர்.லட்சுமணன், மூத்த தலைவர் சி.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.