tamilnadu

img

செதில்பாக்கத்தில் செப்.30 பஞ்சமி நில மீட்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு

திருவள்ளூர், ஜூலை 21- தோழர் பி.சீனிவாசராவ் பிறந்த நாளான செப்டம்பர் 30 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி வட்டம் செதில்பாக்கத்தில் பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பஞ்சமி நில மீட்பு 3-வது திருவள்ளூர் மாவட்ட மாநாடு ஞாயிறன்று (ஜூலை 21) அன்று கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வரவேற்றார்.மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் இ.எழிலரசன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், திரைப்பட இயக்குநர் நா.கோபிநயினார், மாதர் சங்க மத்திய குழு உறுப்பினர் இ.மோகனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறுபான்மை பிரிவு நிர்வாகி ரவிஎடிசன், ஜெய.தென்னரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். கே.மகேந்திரன் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். வட்டத் தலைவர் வி.ஜோசப் நன்றி கூறினார். நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக இ.எழிலரசன், செயலாளராக டி.கன்னியப் பன், பொருளாளராக எம்.சிவக்குமார், துணைத் தலைவர்களாக ஏ.ஜி.கண்ணன்,கே.ராஜேந்திரன், அ.து.கோதண்டன்,இ.மோகனா மாவட்ட துணைச் செயலாளர்களாக பி.துளசி நாராயணன், எஸ். தேவேந்திரன், ஏ.பத்மா, ஜி.சூர்யபிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் செதில்பாக்கத்திலுள்ள 32ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும், அரசு அதிகாரிகள் ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக செல்படுவதை கைவிட வேண்டும், சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். தலித் மாணவர் விடுதியில் போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், இருளர் இன மக்கள் வாழும் பகுதிகளுக்கு குடிநீர் வசதி, சாலை, அமைக்க வேண்டும், மாவட்டம் முழுதும் நூறு நாள் வேலையில் தலித் மக்கள் தனியாகவும் மற்ற சாதியினர் வேறு பிரிவாகவும்  நடப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிiவேற்றப்பட்டன.