திருவள்ளூர், அக். 26- திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட் பட்ட சுப்பாரெட்டிப்பாளை யம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டர்பாளையம் முதல் பள்ளிபுரம் வரை உள்ள முக்கிய சாலை பல ஆண்டு களாக பழுதடைந்துள்ளது. இந்த சாலையில் மழைநீர் தேங்கி குட்டையாக மாறி யிருந்தது. இதனால் கொசுக் கள் உற்பத்தியாவதோடு, தொற்று நோயால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த சாலையை சீர மைக்கக்கோரி மக்களோடு இணைந்து வாலிபர் சங்கத்தினர் தொடர் போராட் டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கவுண்டர் பாளையம் முதல் பள்ளி புரம் வரை ஒன்றிய சாலையை அமைக்க என்டி இசிஎல் மூலம் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சி யரின் உத்தரவு பெற்று சாலை அமைக்கும் பணி மேற் கொள்ளப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரி வித்துள்ளார். இது வாலிபர் சங்கத்தின் தொடர் போரட் டத்திற்கு கிடைத்த வெற்றி என அப்பகுதி மக்கள் கூறி னார்கள்.