tamilnadu

குண்டும் - குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஆக.17-  ஊத்துக்கோட்டை அருகே உள்ள நந்திமங்கலம் ஊராட்சி உள்ளது. இங்கே 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மெயின் ரோட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனி சாலை வழியாக செல்ல வேண்டும். 3 வருடங்களுக்கு முன் இந்த தார் சாலை அமைக்கப்பட்டது. அப்போதே தரமான தார்சாலை அமைக்க வில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.  ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இந்தநிலையில் தற்போது பெய்து வரும் மழையால் சாலை குண்டும் குழியு மாக மாறியது. கிராம மையப் பகுதியில் முழுங்கால் அளவுக்கு சுமார் 10 மீட்டர் தூரத்துக்கு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு ள்ளது. இதில் மழை நீர் தேங்கி உள்ளதால், இந்த  வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.