திருத்தணி அடுத்து நல்லாட்டூர் கிராமத்தில் காதல் விவாகரத்தில் தற்கொலை செய்து கொண்ட மணிமேகலை குடும்பத்திற்கு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தணி வட்டச்செயலாளர் ஏ.அப்சல் அகமது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகி வி.அந்தோணி, வழக்கறிஞர் ரீசர், கிளை செயலாளர் பொற்கொடி குணவதி மற்றும் தமிழ்நாடு பெண்கள் எழுச்சி அமைப்பு, மனித உரிமை கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.