பூண்டி,செப்.16 திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நிலுவைத் தொகை வழங்கக்கோரி பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு திங்களன்று (செப்.16) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. சந்தானம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க த்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாரி கள் நடத்திய பேச்சுவார்த்தை யில் பூண்டியில் பணி யாற்றும் டேங்க் ஆபரேட்ட ர்கள் 133 பேருக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் முறையே மாதம் ரூ. 4860 மற்றும் ரூ.3800 சம்பள உயர்வு, அரியர்ஸ் தொகை முறையே ரூ.40,340 மற்றும் 31,100 உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். துப்புரவு பணியாளர்களுக்கு 55 பேருக்கு அரியர்ஸ் தொகை ரூ. 30,700 உடனடியாக வழங்கப்படும். எஸ்.ஆர். புத்தகம் பதிவு செய்ய போது மான ஊழியர் ஒருவரை நியமித்து உடன் சரி செய்வது. தூய்மை காவலர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அடை யாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனஅதிகாரி கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது