tamilnadu

img

12 லட்சத்தை பெற்று கொண்டு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் நிர்வாகி மீது புகார் மனு  

ரூ.12 லட்சத்தை பெற்று சொந்த அத்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பெண் நிர்வாகி மீது மூதாட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.  

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் நாகபூஷனம்(72). இவரது அண்ணன் மகள் வாணியன்சத்திரத்தை சேர்ந்த எல்லாபுரம் ஒன்றியத்தின் பாஜக செயலாளர் லலிதா. மூதாட்டி நாகபூஷனம் தனக்கு சொந்தமான நிலத்தை விற்று பணம் பெற்றுள்ள செய்தி அறிந்த லலிதா, தாங்கள் மாத ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும் அதில் சேரும்படிம் நாகபூஷனத்தை வற்புறுத்தி உள்ளார்.  

மூதாட்டியும் அண்ணன் மகள்தானே என்றும் சீட்டு கட்டியுள்ளார். 2 முறை கட்டிய சீட்டுக்கான பணத்தை லலிதா முறையாக திருப்பி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து லலிதா தனக்கு கடனாக வேண்டுமென்று 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கேட்டு வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்துடன் 3வதாக கட்டிய சீட்டுப்பணம் 7 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளார். பணத்தை பலமுறை கேட்டும் தராமல், தான் பிஜேபி என்றும் எங்கள் கட்சிதான் ஆட்சியில் உள்ளது என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றும் மிரட்டி உள்ளார்.  

இதுகுறித்து மூதாட்டி நாகபூஷனம், தன் நிலத்தை அரசு எடுத்ததால் எனக்கு வந்த பணத்தை ஏமாற்றி வாங்கி கொண்டதாகவும், அதனை மீட்டு தரும்படியும் கூறியுள்ளார். மேலும் தனக்கு தக்க பாதுகாப்பு வழங்கும்படியும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார். 

;