திருவள்ளூர், மார்ச் 10- கொரேனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளி நாடுகளிலிருந்து வரும் நபர்கள் 24 நாட்கள் தனி மைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள் ளார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மாணவர் காவல் படை சார்பில் பிளாஸ் டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்பு ணர்வு ஊர்வலம் நடை பெற்றது. மேலும் கடற் கரையில் மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மலேசியாவிலிருந்து மணவூர் வந்த நபரை, சந்தேகத்தின் அடிப்படை யில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட வில்லை. மேலும் இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்காக தனி அறைகள் தயார் நிலையில் உள்ளன.வெளிநாடுகளிலி ருந்து யார் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தாலும் அவர்கள் உடனடியாக மருத்துவர்களின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு 24 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப் படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.