tamilnadu

img

பட்னியால் தவிக்கும் நரிக்குறவர் குடும்பங்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை

திருவள்ளூர், ஆக. 19 - ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து உணவு கிடைக்காமல் அல்லல்படும் நரிக்குற வர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிப்பட்டு வட்டம், வடகுப்பம் ஊராட்சி, கொத்தரோடு பகுதியில் 8 வருடங்களாக நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். 13  குடிசை வீட்டில் 33 குடும்பங்கள் குடி யிருக்கின்றனர். இவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளது. இருப்பினும், அரசின் எந்த சலுகை யும் கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் செய்ய முடியாததால், பிஞ்சு குழந்  தைகளுடன் பசி, பட்டினியால் வாடுகின்ற னர். அந்த குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வா கம் தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமும்,  மளிகை பொருட்களும் வழங்க வேண்டும். பட்டினியிலிருந்து அந்த மக்களை காப்பாற்ற  வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் மகேஸ்வரிக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். தமிழரசன், நிர்வாகி வி.அந்தோணி ஆகி யோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.