tamilnadu

img

20 வருடமாக தூர்வாரப்படாத மேல்முதலம்பேடு ஏரி

கும்மிடிப்பூண்டி,ஆக.18- திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல் முதலம்பேடு கிராமம் ஆரணி ஆற்றுக் கரையின் கீழ் அமைந்துள்ளது. இங்கு உள்ள சிறு விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்ற னர். இது போக பூ, மிளகாய், வேர்கடலை போன்ற பயிர்களை செய்து வருகின்ற னர். இந்த  ஏரி 180 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் சில இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் ஏரிப்பாசனத்தையே நம்பி விவசாயம் செய்து வந்த னர். இந்த ஏரிக்கு  மிக அருகில் ஆரணி ஆற்றின் குறுக்கே ஏ.என்.குப்பத்தில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.  இந்த அணையில் இருந்து உபரி நீர்  காவாய்க்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மழை நீரும்  வந்து கலக்கும். இதனால் சிறு, குறு விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தற்போது ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு ள்ளதால், ஏரி எப்போதும் வரண்டே காணப்படுகிறது. ஏரியில் ஆற்று நீரும்  சேமிப்பதில்லை.ஏன்  என பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேட்டால் ஏரியின் வரவு கால்வாயை விட ஏரி மேடாக உள்ளதால் தண்ணீர் ஏற முடியவில்லை என்கின்றனர். தொடர்ந்து ஏரி வறட்சியாகவே உள்ளதால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.விவசாயம் வெகுவாக குறைந்து விட்டது. மேலும் ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள  மின் மோட்டார்களும்  விட்டு, விட்டு செல்கிறது.  இதனால் விவசாயத்திற்கு போது மான பாசன தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படு கின்றனர். ஏரிகரைகளும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரி யில் ஏற்கனவே அரசு சார்பில் தைல மரக்கன்று கள் நடவு செய்து அறுவடை செய்த இடத்தில்  ஏரி முழுவதும் தைல மரங்கள், முள் செடிகள் என  பல்வேறு மரங்கள் புதர்கள்  பரவி கிடக்கிறது. எல்லாவற்றை யும் அகற்றி ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 20-ஆண்டுகளாக தூர்வாரமல் உள்ள மேல்முதலம்பேடு ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆக்கிர மிப்புகளை அகற்றி ஏரியை சமப்படுத்த வேண்டும், வரவு கால்வாயை சீரமைக்க வேண்டும் என சிவராமன், கோவிந்தராஜ் உட்பட பல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.