திருவள்ளூர், அக்.2- பேரத்தூரில் இடி தாக்கி உயிரிழந்த அண்ணப்பூரணி யின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ். கோபால் மனு அளித்துள்ளார். இந்த மனுவின் விவரம் வருமாறு:- திருவள்ளூர் மாவட்டம், பேரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணப்பூரணி. இவர் செப்டம்பர் 22 ஆம் தேதி விவசாய நிலத்தில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இடி தாங்கி உயிரிழந்தார். மேலும் முருகன் (35), உஷா (36), கலா (38), அற்புதம் (44), நாகம்மாள் (36), சின்ன ப்பெண்ணு (45) ஆகிய 6 பேர் இடி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இவர்கள் அனைவரும் ஏழை, எளிய மக்கள். அண்ணப்பூரணியின் கணவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். எனவே அண்ணப்பூரணியின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மேலும் படுகாய மடைந்தவர்களுக்கு தமிழக அரசு உதவ மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.