tamilnadu

குடோனில்  தீ விபத்து

திருவள்ளூர், ஜன.20- திருவள்ளூரை அடுத்த ஈக்காடு பகுதியில் பழைய பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் ஜனார்த்த னன்.  இவர் வழக்கம்போல் ஞாயிறன்று மாலை  குடோனை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில் குடோ னில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமள வென குடோன் முழுவதும் பரவியது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புல்லரம்பாக்கம் காவல்நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்துக் கும் தகவல் தெரிவித்தனர். குடோன் அருகிலேயே குடியிருப்புகள் இருந்ததால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருவள்ளூர், செவ்வாப் பேட்டை பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத் தினர்.  தீயணைப்பு வீரர்க ளுடன் இணைந்து ஈக்காடு பகுதி இளைஞர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;