tamilnadu

10 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

திருவள்ளூர், மே 9-திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செவ்வாயன்று (மே 9) சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை - திருப்பதி சாலையில் 18 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. கிராம பகுதிகளில் 30-க்கும் அதிகமான மின் கம்பங்கள் சரிந்தன. இதனால் திருவள்ளூரை சுற்றியுள்ள அரண் வாயில், அரண்வாயில் குப்பம், திருகூர்மணவாள நகர், வேப்பம்பட்டு, கூடப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்கம்பங்களை சரி செய்யும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. இதனால், மூன்று நாட்களாகஇந்த கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இரவிலும் மின்சாரம் வராததால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பூந்தமல்லி-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

;