tamilnadu

img

சிஐடியு போராட்டம் எதிரொலி 36 மாத ஊதிய நிலுவையை வழங்க அதிகாரிகள் உறுதி

திருவள்ளூர், ஆக. 6-   கிராமங்களில் பணியாற்றும் டேங்க் ஆப் ரேட்டர்களுக்கு 36 மாதமாக ஊதியம் வழங்காத கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி  அலுவலரை கண்டித்து வியாழனன்று (ஆக.6)  சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. உள்ளாட்சிகளில் பணியாற்றும் கடை நிலை ஊழியரர்களான டேங்க் ஆபரேட்டர், தூய்மை பணியாளர், துப்புரவு தொழிலாளர் போன்றோருக்கு அதிகாரிகள் ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். நத்தம் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்ட ராக பணியாற்றி வரும் பக்தவச்சலம் உட்பட  5 பேருக்கு கடந்த 36 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. 19 ஊராட்சிகளில் உள்ள ஊழியர்களுக்கு இதுபோன்று ஊதியம் வழங்காமல் உள்ளனர்.

இதுதொடர்பாக சிஐடியு தலை வர்கள் முறையிட்டபோது, டேங்க் ஆபரேட்டர்  களுக்கு வழங்க வேண்டிய சம்பள பணம்  முழுவதும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்க ளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திரு வள்ளூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்கு னர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊதியத்தை வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின்  சார்பில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி  அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்தப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜி.முரு கேசன், கே.எஸ்.குமாரவேல், ஜி.மாரி, ஜி. மோகன், ஆறுமுகம், சிபிஎம் வட்டச் செயலா ளர் இ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதனை தொடர்ந்து ஒரு வாரத்தில் ஊதிய  பாக்கியை வழங்குவதாக அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர்.