திருவள்ளூர்,டிச. 9 - நெமிலிச்சேரி இருளர் இன மக்கள் குடியிருப்பு அரு கில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும், குப்பை களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று (டிச.9) தொடர் முழக்கப் போராட்டம் நடை பெற்றது. ஆவடி வட்டத்திற்கு உட்பட்ட நெமிலிச்சேரி ரயில் நிலையம் அருகில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி முழுவதிலும் சேகரிக்கப்ப டும் குப்பைகளை இருளர் இன மக்கள் குடியிருப்பு அருகே 5 ஆண்டுகளாக கொட்டப்படுவதாக கூறுகின்றனர். இதனால் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும், அங்கிருக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும், சாலையை சீரமைக்க வேண்டும், குடிநீர், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட வேண்டும், பழங்குடியினர் நலத்துறை மூலம் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும், குடிமனை பட்டா, பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், இருளர் இன மக்க ளுக்கு இனச் சான்றிதழ் வழங்க வேண்டும், திரு வள்ளூர் குப்பம்மாள் சத்தி ரத்தில் தலித் கிறிஸ்த வர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் எஸ். குமரவேல் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசு, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராமசாமி, தையல் சங்க மாவட்டச் செயலாளர் டி.பச்சையம்மாள், அற்புதம், சுமதி, செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். கடம்பத்தூர் ஒன்றியத் தலைவர் கஜேந்திரன் நன்றி கூறினார்.