திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சியி லுள்ள 18 வார்டுகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வியாபாரம், கட்டு மானம், மருத்துவம், நீதிமன்றம், கல்லூரிக்கு என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்ற னர். ஆனால், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பாதாள சாக்கடை திட்டத்தை அமலாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்தன. பின்னர் 2018 ஆம் ஆண்டு பேரூராட்சி முழுவதும் 41 ஆயிரத்து 456 மீட்டர் தூரம் குழாய் பதிக்க ரூ.54. 78 கோடி நிதி ஒதுக்கியிருப்ப தாக அரசு அறிவித்தது. மேலும் 66.52 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ 9.கோடியே 57 லட்சத்து 36 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் கூட தேர்வு செய்யப்பட வில்லை. குழாய் பதிக்கப்பட்ட பிறகு சாலையை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தக்காரரே 5 வருடங்களுக்கு பராமரிக்க வேண்டும். ஆனால் குழாய் பதித்த சாலைகளில் இது வரை எந்த பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. குழாய் பதித்த இடங்களில் மண் கொண்டு மூடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஏற்கனவே இருந்த தார்ச் சாலையையும் பழுதடைந்து விட்டதால், நடந்து செல்ல ஒத்தையடி பாதை கூட இல்லாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஜி.மணி கூறுகையில்,“சக்தி நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இங்கு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்களை பதிக்க சாலைகளில் பள்ளம் எடுக்கப்பட்டது. ஆனால் இதை சரியாக முடாததால் மழைக் காலத்தில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது” என்றார். சாலைகளில் மக்கள் நடந்து செல்ல தற்காலிக பாதையும் அமைக்கவில்லை. முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் என அனை வரையும் வீடுகளில் சிறை வைத்தது போல உள்ளனர். சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை யில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகிகளின் இல்லாததால், பேரூராட்சி நிர்வாகம் பொது மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறியாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். சிபிஎம் பகுதிச் செயலாளர் இ.தவமணி, குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன் ஆகியோர் கூறுகை யில், “சாலை முழுவதும் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிப்பதில்லை, விஷப்பூச்சிகள் வீட்டில் புகும் அபாயம் உள்ளது” என்றனர். சாலையில் கால் வைக்க கூட முடியாத அளவிற்கு சேரும், சகதியுமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளது. சக்தி நகர், பாலாஜி நகர், திரு வேயர்பாடி என பொன்னேரி நகரமே துற்நாற்றத்தில் கிடக்கிறது. எனவே தரமான சாலைகளை விரைவில் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முடங்கி கிடக்கும் மக்களின் வாழ்நிலையை சீரமைக்க இனியேனும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவார்களா? என அப்பகுதி மக்கள் காத்திருக்கி றார்கள். - பெ.ரூபன்.