திருவள்ளூர், ஆக. 4- மீன்வளத்துறை என்ற பெயரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி செவ்வா யன்று (ஆக.4) பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழவேற்காட்டில் பாரம்பரிய மீனவர்க ளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வலி யுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அந்தப் போராட்டத்தில், அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து மீன வர்களுக்கும் தாமதமின்றி வழங்க வேண்டும், நலத்திட்ட உதவிகளை பெற முடியாத ஆயிரக்கணக்கான மீனவ மக்களை அரசுக்கு எதிராக நிறுத்திய மீன்வளத் துறை இயக்குனர் சமீரன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் என்று வலி யுறுத்தப்பட்டது. 18 வயது நிறைந்த மீனவ சமுதாய ஆண்கள் மற்றும் பெண்களை புதிய மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக சேர்க்க வும், சேமிப்பு நிவாரண நிதி, மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி, மீன்பிடி குறைந்த கால நிவாரணம், நலவாரிய பயன்கள் மற்றும் மானிய டீசல் ஆகியவற்றினை தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு மீனவர் சங்கம், திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய மீனவ சங்கங்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய மீனவ சங்க பொதுச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மீன்பிடி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) மாவட்ட செயலாளர் டி.நித்தியானந்தம் உள்ளிட்டு பல்வேறு மீனவ சங்கப் பிரதி நிதிகள் பேசினர்.