tamilnadu

கொரோனா பரிசோதனை: அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் தலைமை மருத்துவர் அழைப்பு

திருவள்ளூர், ஜூலை 15 - கொரோனா பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள்  பொன்னேரி அரசு பொது மருத்துவ மருத்துவமனைக்கு வருமாறு அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  அனுரத்னா அழைப்பு விடுத்துள்ளார். பொன்னேரி பகுதியில் வசிக்கும் மக்கள் சர்க்கரை நோய்,  ரத்தக் கொதிப்பு, புற்று நோய், சிறுநீரகக் கோளாறு, காசநோய்  உடையவர்களாக இருந்தால் இரு வாரங்களுக்கு ஒருமுறை யேனும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  பொன்னேரி பகுதியில் கொரோனா நோய் தொற்று  நாளுக்கு  நாள் அதிகரித்து வருகிறது. இந்தச்சூழலில் மேற்குறிப்பிட்ட நோயாளிகளுக்கு தொற்று வர அதிகம் வாய்ப்பு உள்ளது.

அதற்கேற்ப மருத்துவ மனையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து இலவச மாக பரிசோதனை செய்து கொள்ளலாம். தனியார் ஆய்வ கங்களை விட அரசு மருத்துவமனையில் இலவசமாக, தரமாக பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பரிசோதனைக்கு வருபவர்கள் ஓபி சீட்டு வாங்கிக் கொண்டு, நேராக ஆய்வகத்திற்கு செல்ன்று (மருத்து வரை பார்க்க வேண்டாம்) பரிசோதித்துக் கொள்ளலாம். பரிசோதனை முடிவுகளை தொலைபேசி வாயிலாக தெரி விப்படும். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பரி சோதனை செய்யப்படும். இவ்வாறு பொன்னேரி அரசு பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் அனுரத்னா தெரிவித்துள்ளார்.