சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யின் மும்முனை தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவள்ளூர் பஜார் வீதியில் அரசியல் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. நகர கிளைச் செயலாளர் ம.உதயநிலா தலைமை தாங்கினார். தமுஎகச மாநில பொருளாளர் எஸ். ராமச்சந்திரன் “இந்தியா எனது தாய்நாடு அதை கேள்வி கேட்க நீ யாறு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.கீதா, வட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன், தமுஎகச மாவட்ட நிர்வாகி து.மகேந்திரன், பீடி சங்க மாவட்டச் செயலாளர் டி.ஆர்.பலராமன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஷேக்தாவுத், பள்ளிவாசல் தலைவர் ஜாகீர்ஹூசைன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.