tamilnadu

வேட்டைக்காரன் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திடுக

திருவள்ளூர், ஜூன் 4- வேட்டைக்காரன் இனத்தவரை பழங்குடியினர்  (எஸ். டி) பட்டியலில்  சேர்க்கவலியுறுத்தி  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  தலைமைச் செயலாளரிடம் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கத்தினர் திங்களன்று (ஜூன் 3) மனு அளித்தனர்.அதன் விவரம் வருமாறு:-பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் இடம் பெற்று இருந்த வேட்டைக்காரன் பழங்குடி இன மக்களை 1956-பிறகு எஸ். டி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எதற்காக பழங்குடியினர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்று இது நாள் வரை வேட்டைக்காரன் இன மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் நேரில் சென்று வலியுறுத்தி உள்ளோம்.கடந்த பிப்ரவ 7ஆம் தேதி மனுவின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருக்கு முதன்மை செயலாளரே தொடர்பு கொண்டு பேசினார்.  ஆனால் பழங்குடியினர் சம்மந்தமான ஆராய்ச்சியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வேட்டைக்காரன்  சம்மந்தமான ஆய்வுகளை முடித்து 2016 டிசம்பர்-25 ல் வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதுபோல தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வேட்டைக்காரன் பழங்குடியினர் இன மக்கள் வாழும் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் போன்ற மாவடங்களில் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பி வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர்  (எஸ். டி)பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, அகில இந்திய ஆதிதிவாசிகள் தேசிய மேடை அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம் ஆகியோர்  தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை  தலைமைச் செயலாளரிடம் மனுஅளித்தனர்.