திருவள்ளூர், ஆக. 23 - இருளர் இன மக்கள் குடியிருக்கும் பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர ரேசன் கடை கடந்த 6 ஆண்டுகளாக திறக்கப்படா மல் உள்ளது. திருத்தணி வட்டம், சூரியநகரம் ஊராட்சி, ராமாபுரம் இருளர் காலனியில் 40 குடும்ப அட்டைகள் உள்ளன. இப்பகுதிக்கு அருகே உள்ள பகுதியில் 170 குடும்ப அட்டைகள் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து 210 குடும்ப அட்டைகள் தற்போது உள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்கள் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூரிய நகரத்திற்கு சென்றுதான் ரேசன் பொருட்களை வாங்க வேண்டி உள்ளது. இந்த சிரமத்தை போக்க, இருளர் காலனியிலேயே ரேசன் கடையை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து 2013-14 ஆண்டில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் இருளர் காலனியில் பகுதிநேர ரேசன் கடை கட்டப்பட்டது. ஆனால், 6 ஆண்டுகளாக அந்த பகுதிநேர ரேசன் கடையை திறக்காமல் உள்ளனர். இத னால் அந்த ரேசன் கடை கட்டிடத்தை சுற்றி லும் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. இந்த பகுதி நேர கடை கட்டிடத்தை சுற்றி சுத்தம் செய்து, பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வட்ட வழங்கல் அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசன், மாவட்ட குழு உறுப்பினர் வி.அந்தோணி ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.