tamilnadu

img

விருதுகள் ஏராளம் ...சாதனைகள் தொடரும் .. கேரள முதல்வர் உறுதி....

திருவனந்தபுரம்:
கேரளத்தின் தற்போதைய ஆட்சியில் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் மாநிலம் பெற்றுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். இவை அனைத்தும் புகழ்பெற்ற சாதனைகள் எனவும் அவை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
பெங்களூரை தளமாகக் கொண்ட பொது விவகார மையம் நடத்திய ஆய்வின்படி, இந்த ஆண்டு சிறந்த நிர்வாக மாநிலமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் நிதி ஆயோக்கும் தொகுத்த நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறியீட்டிலும் கேரளம் முதலிடம் பிடித்துள்ளது. முந்தைய ஆண்டை விட அதிக புள்ளிகள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா டுடே நடத்திய மாநிலங்களின் ஆண்டு கணக்கெடுப்பில் கேரளா பல்வேறு பிரிவுகளில் முதலிடத்தில் உள்ளது. சட்டம்- ஒழுங்கு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலா, சிறந்த பால் உற்பத்தித்திறன் ஆகிய பிரிவுகளில் கேரளா இந்த விருதைப் பெற்றது.ஊடக ஆய்வுகள் மையம் நடத்திய ஆய்வின்படி, கேரளாவில் மிகக் குறைந்த அளவிலான ஊழல் உள்ளது. இதுபோல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா நடத்திய இந்தியா ஊழல் கணக்கெடுப்பில் கேரளத்தில் மிகக் குறைந்த ஊழல் உள்ளது தெரியவந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் துறைகளிலும் பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை கேரளம் வென்றுள்ளது. கல்வி, சுகாதார தரவரிசையில் நாட்டுக்கே  கேரளம் ஒரு முன்மாதிரி. 
இது சமீபத்தில் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஐ.நா விருதையும் பெற்றுத் தந்தது. தற்போது, பொது விவகாரங்களுக்கான மையம் ஆளுகைக்கான விருதை வழங்கியுள்ளது. ஆட்சி நிர்வாகம் என்றால் அரசியல் தலைமையும் அதிகாரிகளும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் ஆட்சி வெற்றி பெற முடியும். இதுபோன்ற சாதனைகளை பிரதிபலிக்கும் வகையில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.