திருவனந்தபுரம்:
கேரள அரசுப் பேருந்து கள் (கேஎஸ்ஆர்டிசி) இம்மா தம் 25 ஆம் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட உள்ளன. கோவிட் கால வழிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் 6 வரை இந்தபேருந்துகளை இயக்க உள்ளதாக அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் அறிவித்தார்.
ஆனால் தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்குவது குறித்து இந்த அறிவிப்பில் ஏதும் கூறப்படவில்லை.கேரள அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தின் online.keralartc.com என்னும் இணைய தளத்தில் பயணச்சீட்டு முன்பதிவு துவக்கப் பட்டுள்ளது. 10 சதவிகிதம் அதிக பயணக்கட்டணம் செலுத்த வேண்டும். பயணிகள் அனைவரும் http://covid19jagratha.kerala.nic.in என்னும்கோவிட் குறித்த போர்ட்டலில் பதிவு செய்து கேரளஅரசின் அனுமதி பெற்று மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும்.
பயணச்சீட்டு முன்பதிவு செய்வோர் கேரள, கர்நாடக, தமிழ்நாடு அரசுகள் ஏற்படுத்தியுள்ள கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பயணநாளில் போதுமான பயணிகள் இல்லாதது போன்ற ஏதேனும்காரணத்தால் பேருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டால் முழுத் தொகையும் திருப்பி தரப்படும். பயணம் தொடங்குவதற்கு முன்பு அலைபேசியில் ஆரோக்கிய சேது செயலியை நிறுவியிருக்க வேண்டும்.