tamilnadu

img

லைப் திட்டத்தில் வராத 10,000 எஸ்சி குடும்பங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை வீட்டு வசதிக்காக அரசு உதவி

திருவனந்தபுரம்:
லைப் வீட்டு வசதி திட்டத்தின் முதல் கட்டத்தில் சேர்க்கப்படாத மற்றும் முந்தைய வீட்டுத் திட்டங்களில் உதவி கிடைத்த போதிலும் கட்டுமானத்தை முடிக்க இயலாத பட்டியல் சாதியினரின் வீடுகளை புனரமைக்க நிதி உதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.

இதுகுறித்து சட்டம் மறறும் பட்டியலின மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகையில், லைப் மிஷனின் முதல்கட்டம்,  கட்டி முடிக்கப்படாத வீடுகளை முடிப்பதாக இருந்தது. இது முந்தைய வீட்டுவசதித் திட்டங்களுக்கு முழுநிதியுதவி பெறாத குடும்பங்களைக் கருத்தில் கொண்டது. கடைசித் தவணையைப் பெற்றிருந்தாலும், பல வீடுகள் பணி முடியாமல் இருப்பதை பட்டியல் சாதி மேம்பாட்டுத் துறை கண்டறிந்துள்ளது, அவைநிதி சிக்கல்களால் முடிக்க முடியாதவை, அல்லது காலாவதியாகி வசிக்க முடியாதவை. இதன் அடிப்படையில், குறைந்த செலவில் வசிக்கக் கூடிய வீடுகளுக்கு புதிய திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.135 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.